" உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஹேம்நாத் செய்த கொடுமையால் சித்ரா தற்கொலை" - சித்ராவின் தந்தை காமராஜ்

0 2750
" உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஹேம்நாத் செய்த கொடுமையால் சித்ரா தற்கொலை" - சித்ராவின் தந்தை காமராஜ்

கணவர் ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த கொடுமையால் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சித்ரா தற்கொலை தொடர்பாக தன் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில், சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கக் கூடாது என சித்ராவை ஹேம்நாத் சித்ரவதை செய்ததாக தந்தை காமராஜ் பதில் மனு தாக்கல் செய்தார்.

சித்ரா வீட்டில் இல்லாதபோது தனது பெண் தோழியை ஹேம்நாத் வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், இருவரும் ஒன்றாக இருந்தபோது தான் சித்ரா தற்கொலை செய்ததாகவும் காமராஜ் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments